ஒட்டங்காட்டில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

75பார்த்தது
ஒட்டங்காட்டில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
பேராவூரணி அருகே ஓட்டங்காட்டில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. அசோக்குமார் எம். எல். ஏ. முகாமை தொடங்கி வைத்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். ஊராட்சி தலைவர்கள் ராஜாக்கண்ணு (ஒட்டங்காடு), சிவசம்மாள் ராமராசு (புனல்வாசல்), சுந்தர்ராஜன் (கல்லூரணிக்காடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுவாக பெற்றுக்கொண்டனர். மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள் செல்வேந்திரன், சாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலர் அருள், டாக்டர் பொன் அறிவானந்தம், பேராவூரணி தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல்மஜீத், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாக்கியம் முத்துவேல், அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் பழனிவேல், கலைஞானம் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி