தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே களத்தூர் கிராமத்தில் இருந்து நாடாங்காடு செல்லும் சாலையில் பனை மரங்கள் உள்ளன. இந்த பனை மரங்களின் அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை நேற்று யாரோ தீ வைத்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக தீ பனை மரங்களுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது மேலும் அருகில் இருந்த பனை மரங்கள் தப்பித்தன.