தஞ்சை மன்னர் சரபோஜி
அரசினர் கல்லூரியில் 1974ல் இளம் அறிவியல் (இயற்பியல்) முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகள் முடிந்த பொன்விழா ஆண்டு விழாவை கொண்டாடினர். கல்லுாரி முதல்வர் (பொ) ஜெயக்குமார் தலைமை வகித்தார் இதில் முன்னாள் மாணவர்கள், தற்போதைய துறைத் தலைவர், பேராசிரியர்கள்,
தற்போதைய மாணவர்களும் கலந்து கொண்டனர். நடப்பாண்டு முதல் இறுதி ஆண்டு படித்து வரும் இளம் அறிவியல் மற்றும் முது அறிவியல் (பிஎஸ்சி, எம்எஸ்சி தமிழ் மற்றும் ஆங்கிலவழி இயற்பியலில்) முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக முன்னாள் மாணவர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.