இயற்கை வளங்களை பயன்படுத்தும் வகையில் விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் இயக்க வேண்டும் என தஞ்சை மின்வாரிய பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி கூறியதாவது: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி விவசாய பம்பு செட்டுகளை இரவில் இயக்குவதில் இருந்து பகல் நேரத்தில் முழுமையாக இயக்குவது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின் சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு மற்ற வளங்களை கொண்டு மின் ஆற்றலை தயாரிக்கும் பொழுது ஏற்படும் மாசுக்காட்டுப்பாட்டின் அளவினை குறைக்க முடியும். இதனால் நமது நாட்டினை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கில் பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திட வேண்டும். அனைத்து விவசாயிகளும் இயன்றவரை தங்களது விவசாயம் மின்மோட்டோர்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.