பேராவூரணி: வெள்ளத்தில் இறந்த குழந்தையின் பெற்றோருக்கு 4 லட்சம் நிவாரணம்

79பார்த்தது
பேராவூரணி: வெள்ளத்தில் இறந்த குழந்தையின் பெற்றோருக்கு 4 லட்சம் நிவாரணம்
சேதுபாவாசத்திரம் ஊராட்சியில் வசிக்கும் வினோத் - பிஸ்மில்லா பேகம் தம்பதியரின் மகள் தர்னிஷ் 18 மாத குழந்தை கடந்த 14 நாளில் விட்டின் அருகே விளையாடிய போது நீர்வரத்து அதிகமாக சென்ற வாய்க்காலில் விழுந்து குழந்தை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தது. இதையடுத்து மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத்தொகையை பெற்றோரிடம் முரசொலி எம்.பி வழங்கினார். அப்போது பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி