தஞ்சாவூரில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி வெளியூர் பயணம்

82பார்த்தது
தஞ்சாவூரில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி வெளியூர் பயணம்
தஞ்சையில் இருந்து திண்டுக்கல், தேனிக்கு 2,500 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் அரவைக்காக லாரிகள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு பொதுவினியோகத்தின் கீழ் அரிசியாக மக்களுக்கு வினியோகம் செய்யப்படுவது வழக்கம். 

அதன்படி நேற்று தஞ்சையில் இருந்து திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களுக்கு தலா 1250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் அரிசி மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி