தஞ்சையில் இருந்து சேலத்துக்கு அரவைக்காக 1,000 டன் நெல் அனுப்பும் பணி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. இதையடுத்து நெல் அரவைக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பறவைக்கு பிறகு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இந்த அரிசி விநியோகிக்கப்படும்.