தஞ்சை: 1, 050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

75பார்த்தது
தஞ்சை: 1, 050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தவரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். பாபநாசம் அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, அந்த வழியாக வந்த பாபநாசம் அருகே தேவராயன்பேட்டை மாமரத்து கோயில் தெருவைச் சேர்ந்த தியாகராஜனை (42) பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவர் அருகிலுள்ள இடத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும், பாபநாசம், பண்டாரவாடை, வங்காரம்பேட்டை, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து, 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினர் கைப்பற்றி தியாகராஜனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி