பாபநாசம் சுற்றுப்பகுதிகளில் பலத்த காற்றுடன் இரவுபெய்த கன மழை

61பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான திருக்கருகாவூர், பண்டாரவாடை , ராஜகிரி, திருப்பாலைத்துறை பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த்து.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக சாலை எங்கும் மழை நீர் ஓடியது - முன்னெச்சரிக்கையாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி சென்றனர்.

மேலும் பாதுகாப்பு கருதி பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

இரவு நேரத்தில் பெய்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

மறுபுறம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகி வருவதால் மகிழ்ச்சி நிலவுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி