தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீபகாலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதுகுறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பகுதி விவசாயிகள் சமீப காலமாக இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்கு முன்னேற்பாடாக அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இயற்கை உரத்திற்காக கால்நடைகளின் கழிவுகளை சேகரித்து வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலங்களில் கால்நடைகளை
விவசாய நிலங்களில்
உரத்திற்காக சாணம் எரு, மற்றும் ஆடுகளின் புழுக்கை ஆகியவற்றை இயற்கை உரங்களாக பயன்படுத்தி வருகின்றனர். முந்தைய காலங்களில் கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிகளவில் விவசாயம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.