தஞ்சை: சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தல்; வாலிபர் கைது

58பார்த்தது
தஞ்சை: சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தல்; வாலிபர் கைது
திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரக பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலத்தளி கிராமத்தில் வேகமாக சென்ற ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆற்று மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ்குமாரை (வயது 19) போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி