முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குறிச்சி, கீழக்காட்டூர், காகிதபட்டரை, பந்தநல்லூர், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிக்குடி, நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமணக்குடி, கயலூர், திருக்கோடிகாவல், குணதலபாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.