தஞ்சாவூரில் குடிநீரில் நெளியும் புழுக்கள் - மக்கள் அச்சம்

4217பார்த்தது
தஞ்சாவூரில் குடிநீரில் நெளியும் புழுக்கள் - மக்கள் அச்சம்
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு ராமகிருஷ்ணபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு மணிமண்டபம் அருகேயுள்ள மாநகராட்சி நீர்த் தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந் நிலையில், கடந்த 10 நாட்களாக இங்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் சிறிய அளவிலான புழுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியபோது, “எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் புழுக்கள்
உள்ளதாக 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நீரை அருந்தினால் நோய்த் தொற்று ஏற்படும் என அச்சமாக உள்ளது. நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து பல நாட்களாகி விட்டதாக கூறுகின்றனர். எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி