பேராவூரணியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய சந்தை அமைக்க ரூ. 403 லட்சம் மதிப்பீட்டில் டென்டர் பெறப்பட்டு, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே சந்தை வேலை முடிவடையும் வரை தற்காலிக செட் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் பழைய ஆஸ்பெஸ்டாஸ் கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. கடைகள் கட்டாமல் பெரிய அளவில் செட்டு அமைத்து, இதர அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.