தஞ்சை மாவட்டத்தில் முப்போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடு பொருட்கள் வர வழைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற் பனை செய்யப்படும்.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகு படி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரம் வெளி மாவட் டங்களில் இருந்து லாரிகள் மற்றும் சரக்குரெயில்களில் கொண்டு வரப் படுகிறது. அதன்படி ஒடிசாவில் இருந்து சரக்குரெயிலின் 23 வேகன் களில் 1. 350 டன் டி. ஏ. பி. காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை ரெயில் நிலையத் திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
பின்னர் உர மூட்டைகள் லாரி களில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.