கும்பகோணம் நாதன்கோவிலில் உள்ள ஜகந்நாத பெருமாள் கோயிலில் சாம்ராஜ்ய லெஷ்மிக்கு சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சங்கல்பம், புண்ணியாகவாஜனம், கும்ப பூஜை, அக்னி பூஜை, கசீ சூக்த ஹோமம் முடிந்த பின் சாம்ராஜ்ய லெஷ்மிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
பின்னர் விசேஷ திருமஞ்சனம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சாம்ராஜ்ய லெஷ்மி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் உள் பிரகாரத்தில் தாயார் உலா வந்தார். ஏற்பாடுகளை ஜகந்நாத பெருமாள் கோயில் கைங்கர்ய சபாவினர் செய்தனர்.