கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

64பார்த்தது
கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
கபிஸ்தலம் அருகே உள்ள பாபநாசம், வடக்கு வீதி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர். சாமிநாதன் (வயது 48) தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கபிஸ்தலம் அருகே உள்ள கூடலூர் கொள்ளிடக்கரையில் கருப்ப சாமி கோவில் அருகில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி