கும்பகோணம்: குழாய் திறந்து வைத்த எம்எல்ஏ

78பார்த்தது
கும்பகோணம்: குழாய் திறந்து வைத்த எம்எல்ஏ
கும்பகோணம் தொகுதி, வாளபுரம் ஊராட்சி கீழப்பறட்டை ஆதிதிராவிடர் தெருவில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 3.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் மாற்றுத்திறனாளியான ஆரோக்கியசாமியை வைத்து திறந்து வைத்தார். 

மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜே. சுதாகர், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் வி.வி. நடராஜன் தேவனாம்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜா என்கிற பிரவீன் ராஜ் அசூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.எஸ். தமிழ்மாறன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆலமன்குறிச்சி குமார் (அட்மா வேளாண்மை குழு தலைவர்), செயலாளர்கள் செல்வம் கந்தசாமி பிரதிநிதிகள் சுப்ரமணியன் அருண்குமார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் திருநல்லூர் மணி ஊராட்சி செயலர் வீரமணி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி