திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கரிகால் சோழனை
கண்டித்தும், பணி இடை நீக்கம் செய்ய கோரியும் கும்பகோணம்
நீதிமன்ற வளாகத்தின் முன் மூத்த வழக்கறிஞர்கள், மற்றும்
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில்
ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு
ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் துணைத் தலைவர்
இளங்கோவன், பொருளாளர் ராஜா சீனிவாசன், செயலாளர் செந்தில் ராஜன் உட்பட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.