கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், சித்திரை பெருந்திருவிழா திருதேரோட்டம்
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 03வது முக்கிய திவ்ய தேசமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில் தான்தமிழ் வேதமான 4 ஆயிரம் திவ்ய பிரபந்தம் அரங்கேற்றம் செய்யப்பட்ட புனித தலமாகும்.
இத்திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக கடந்த 02ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09ம் நாளான இன்று காலை உற்சவர் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளியவுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தும் தேரில் பவனி வரும் சுவாமிகளை தரிசனம் செய்தும் வருகின்றனர்.