நேபாளத்தின் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜூலை 24) புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விபத்தை நேரில் பார்த்த ஆதேஷ் லாமா கூறுகையில், "எனது கேரேஜில் வேலை செய்து கொண்டிருந்தேன், அப்போது பலத்த சத்தம் கேட்டது. டயர் வெடித்ததாக நினைத்தேன், ஆனால் விமானம் கோரமான விபத்தில் சிக்கியதாக எனக்கு தெரியவந்தது, அது ஒரு பயங்கரமான தருணம்.” என்றார்.