தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பூக்கள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு இன்று பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் ஒரு மல்லிகை ரூ. 2000 முதல் ரூ. 2200 வரை விற்பனையாகிறது. கனகாம்பரம் ரூ. 1300க்கும், பிச்சிப்பூ ரூ. 1500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருகின்ற செவ்வாய்க்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு இன்று மல்லிகைப் பூவின் விலை ரூ 2200 விற்பனையானது. இன்னும் பண்டிகை வருவதை முன்னிட்டு மல்லிகைப்பூ விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.