தென்காசி SP அலுவலகம் இன்று திறப்பு

79பார்த்தது
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக புதிய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் இன்று(ஆக. , 1) திறந்து வைத்தார். ரூ. 11. 64 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் புதியதாக அமைந்துள்ள கட்டடம் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், நெல்லை சரக டிஐஜி பர்வேஸ்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி