தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில் 'தீய சக்தியை வேரறுப்போம்' என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழக மகளிர்க்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சிகளில் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்தன் (எ) அய்யாசாமி உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.