தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும் சேவல் கிராமத்தில் உள்ள பூலி தேவரின் 309 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு புலித்தேவரின் ஐந்தாவது தலைமுறை வாரிசான கோமதி முத்து ராணி துரைச்சி தலைமையில் அவரது கணவர் பாண்டியராஜா, மூத்த மகன் சிவகுமார் சாமிதுரை, இளைய மகன் சிபி ஆகியோர் கலந்துகொண்டு அங்குள்ள கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேற்று(செப்.4) வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.