தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே எலுமிச்சை மார்க்கெட் வருகிறது தற்போது எலுமிச்சை வரத்து அதிகரித்து உள்ளதால் எலுமிச்சை விலை சற்று குறைந்து காணப்படுகிறது.
இதனால் இன்று ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எலுமிச்சம் விளைச்சல் அதிகரித்ததால் பழம் விலை இன்று குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.