தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பூக்கள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 2500 முதல் ரூ. 2700 வரை விற்பனையாகிறது.
கனகாம்பரம் ரூ. 800க்கும், பிச்சிப்பூ ரூ. 1300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு இன்று மல்லிகைப் பூவின் விலை ரூ2700 விற்பனையானது இதனால் அப்பகுதி விவசாயிகளும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.