தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (மார்ச் 28) நடைபெறுகிறது. இக்கல்லூரியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது.
பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் யூ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குநர் ஏ. வெளியப்பன் ஆகியோர் பங்கேற்று, பட்டங்கள் வழங்கிப் பேசுகின்றனர். இதில், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ. ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜி. கருப்பசாமி, பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.