தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள அலுவலக வளாகத்தில் வைத்து அமைந்துள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதல் தற்போது திராவிட மாடன் அரசின் தலைவர் தளபதியார் வரை இஸ்லாமிய சொந்தங்களுக்கு உறுதுணையாக நிற்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் கண்ணியத்திற்குரிய முகமது ரபீக் ஆலிம்சா துவா செய்து வைத்து நோன்பினை திறந்து வைத்தார்.
பின்னர் அனைவரும் நோன்பு உணவு உண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தென்காசி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணை துணை அமைப்பாளர் ஜலால் மற்றும் நகர மாணவரணி துணை அமைப்பாளர் யாசர் அராபத் ஆகியோர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.