தென்காசி மாவட்டம் வி. கே. புதூர் மானூர் கால்வாயில் தலைமதகில் கூடுதல் திறப்பு அமைக்கும் பணி மற்றும் மானூர் கால்வாயை செம்புலி பட்டணம் முதல் துத்திக்குளம் வரை சீரமைக்கும் பணி சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன.
இதன் மூலம் தென்காசியில் 14 குளங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 9 குளங்கள், 4000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாச வசதி பெறுவதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
இதில் ஜேசிபி எந்திரம் மூலம் கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இருக்கன்டா பகுதி விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.