தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காமராஜர் திடலில் வைத்து இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பை கண்டித்தும் மும்மொழிக்கொள்கையை எதிர்த்தும், ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டைப் புறக்கணித்த ஒன்றிய பா. ஜ. க அரசை கண்டித்தும் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துசெல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் U. S. P. சீனிவாசன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் செண்பக விநாயகம் சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.