திருவேங்கடம்:: கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

55பார்த்தது
திருவேங்கடம்:: கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள சங்கபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன். வயிற்று வலி காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சம்பவதினத்தன்று பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார்பாலமுருகனின் சடலத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி