தென்காசி: கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கம்

63பார்த்தது
தென்காசி: கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நேற்று (மார்ச் 14) தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவினை போற்றும் இலக்கிய கருத்தரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் சீ. ஜெயச்சந்திரன் தலைமையில் அரசு இசைப்பள்ளி மாணவர்கள் மங்கள இசையுடன் நடைபெற்றது. 

தென்காசி மாவட்டத்தை சார்ந்த மறைந்த தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகள் அவர்கள் எழுதிய நூல்கள், தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகள் குறித்தும், திரிகூட ராசப்பக் கவிராயர் குறித்தும், முனைவர் சா. வே. சுப்பிரமணியன் குறித்தும், எழுத்தாளர் சு. சமுத்திரம் குறித்தும் கருத்தாளர்கள் கருத்துரை வழங்கினர். 

இக்கருத்தரங்கத்திற்கு முன்னர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ. 5,000/- இரண்டாம் பரிசுத் தொகை ரூ. 3,000/-, மூன்றாம் பரிசுத் தொகை ரூ. 2,000/- எனவும், கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ. 5,000/- இரண்டாம் பரிசுத் தொகை ரூ. 3,000/- மூன்றாம் பரிசுத் தொகை ரூ. 2,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் சீ. ஜெயச்சந்திரன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி