தென்காசி மாவட்ட ஆட்சித்
தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நேற்று தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்தி ரன், தனுஷ்குமார் எம். பி. , எம். எல். ஏ. க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன்,
தி. மு. க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நகர்மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.