கலைஞர் கனவு இல்ல திட்ட பயளாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கல்

74பார்த்தது
கலைஞர் கனவு இல்ல திட்ட பயளாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கல்
கடையம்பெரும்பத்து ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயளாளிகளுக்கு வீடு கட்டிட ஆணையிணை பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம்பெரும்பத்து ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் முதற்கட்டமான பயனாளிகள் தேர்வு செய்து, அவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப் பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இவ்வூராட்சி பகுதியில் இத்திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் பரமசிவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி