குறுவட்ட மேஜை பந்து போட்டி: ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

51பார்த்தது
குறுவட்ட மேஜை பந்து போட்டி: ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்
தென்காசி குறுவட்ட மேஜை பந்து விளையாட்டுப் போட்டிகள் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இப் போட்டிகளில்  தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ் போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  

ஆண்களுக்கான ஜூனியர்  ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் அருள் ஆனந்த ஜெபர்சன் முதலிடமும்,   இரட்டையர் பிரிவில் அருள் ஆனந்த ஜெபர்சன் , அஸ்வின் ராஜ் ஆகியோர் முதலிடமும் பெற்றனர்.

சீனியர் மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரையேல் சச்சின் சிண்டே முதலிடமும், இரட்டையர் பிரிவில் ஸ்ரையேல் சச்சின் சிண்டே, வெங்கடேஷ் ஆகியோர் முதலிடமும்,

சூப்பர் சீனியர் மாணவர்களுக் கான ஒற்றையர் மாதேஸ் வரன் முதலிடமும், இரட்டையர் பிரிவில் மாதேஸ்வரன், ஆண்டன் அன்ஸ்டீன்   முதலிடமும் பெற்றனர்.

பெண்களுக்கான ஜூனியர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி நந்திதா பார்கவி முதலிடமும், இரட்டையர் பிரிவில் நந்திதா பார்கவி, தன்ஷிகா ஆகியோர் முதலிடமும்,

சீனியர் ஒற்றையர் பிரிவில் மாணிக்க ஸ்ரீ முதலிடமும், இரட்டையர் பிரிவில் மாணிக்க ஸ்ரீ, சஹானா முதலிடமும், சூப்பர் சீனியர் ஒற்றையர் பிரிவில்  மதுபாலா முதலிடமும், இரட்டையர் பிரிவில்  மதுபாலா,   ரித்து வர்ணா முதலிடமும் பெற்றனர்.

இவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான மேஜைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி