சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

71பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவின்சங்கர் (23) என்பவர் அந்த பகுதியில் புதிய கட்டிடத்தில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் வாலிபர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி