தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் தொடக்கப்பள்ளி இந்த பள்ளி சுதந்திரம் பெறுவதற்கு முன் துவங்கப்பட்டது. இந்த பள்ளியில் கடந்த வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக பள்ளியின் மேற்கூரை மற்றும் கம்புகள் வீழ்ந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
சம்பவம் நடைபெற்ற அன்று தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமூர்த்தி என்ற குட்டியப்பா சட்டமன்ற நிகழ்வில் பங்கேற்ற காரணத்தினால் நேற்று அந்த பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சேத விபரங்கள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அங்குள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது, மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் எம்எல்ஏவிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த வட்டார கல்வி அலுவலகத்தில் ஆய்வு செய்த போது மூட்டை மூட்டையாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடை மற்றும் பாக்கெட் (புத்தகப்பை) இருந்ததை கண்டு இதனை மாணவ மாணவிகளுக்கு வழங்காமல் யாருக்கும் பயனில்லாமல் இப்படி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் ஏன் இப்படி வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.