தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தாட்கோ நகரில் போலீசார் வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தபோது அந்த காரில் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக அந்த நபரை கைது செய்து அந்த காரையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரில் கஞ்சா கொண்டு வந்த அந்த நபர் திருநெல்வேலி ரெட்டியார் பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் தினேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் உத்தரவின் பேரில் செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கே. எஸ். பால முருகன் கஞ்சா வியாபாரி தினேஷ் என்பவரை இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.