தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ அலுவலகம் மூலம் நன்னிலம் மகளிர் நில உடமைத்திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ. 5 இலட்சம் மானியமும், 05 பயனாளிகளுக்கு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டையினையும்,
05 பயனாளிகளுக்கு தூய்மைப்பணியாளர் நல வாரியம் வழியாக தூய்மை காவலர்களாக பணிபுரிபவர் களுக்கு ரூ. 5 இலட்சம் மருத்துவ செலவினங்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் வழங்கினார்.