தென்காசி: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

3306பார்த்தது
தென்காசி: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே. ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். விவசாயி. இவரது மகன் மதிசெல்வம் (வயது 16). இவர் திருமலாபுரம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதிசெல்வம் பள்ளிக்கு செல்லவில்லை. அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த சின்னகோவிலாங்குளம் போலீசார், மதிசெல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி