தென்காசி சங்கரன்கோவில் மேல செக்கடி தெரு பகுதியில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றில் கிடைக்கப்பெறாத அரிய வகை புத்தகங்கள் மற்றும் போட்டி தேர்வு புத்தகங்கள் உள்ளதா என கடைக்கு நேரடியாக சென்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு திமுக செயலாளருமான வழக்கறிஞர் ராஜா கேட்டிருந்தார்.
மேலும் போட்டித் தேர்வு புத்தகங்கள் அதிகம் உள்ளது என கடைக்காரர் சொல்லிய நிலையில் புத்தகங்கள் அனைத்தும் தானே வாங்கி கொள்வதாகவும் அதனை சங்கரன்கோவிலில் உள்ள பல்வேறு நூலகத்திற்கு இலவசமாக கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.