திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

1068பார்த்தது
திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை முன்னிட்டு சங்கரன்கோவிலில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி தலைமையில் தேரடி பகுதியில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உச்சநீதிமன்ற தீர்ப்பை உற்சாகமாக வரவேற்றனர். இதில் மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் மாரிச்சாமி, சோமசெல்வபாண்டியன், மகளிர் அணி சமுத்திரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி