தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கக்கன் நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு
விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பாளர் எல்லாளன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அது தொடர்ந்து சுடர் ஜோதி ஓட்டத்தை விளக்கேற்றி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த சுடர் ஜோதி ஓட்டம் சங்கரன்கோவில் இருந்து தொடங்கி குருவிகுளத்திற்கு சென்றடைந்தனர்
இந்த நிகழ்ச்சிகள்
விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல நெறியாளர் தமிழினியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன். குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன், மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் இளங்கோவன், திருவேங்கடம் நகரச் செயலாளர் சிவக்குமார், குருவிகுளம் கிளைச் செயலாளர் நாகராஜ், கிளை துணை செயலாளர் கார்த்திக் மற்றும் தமிழ் மணி உள்ளிட்ட ஏராளமான
விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.