தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு திமுக சார்பில் வெற்றி பெற்ற டாக்டர் ராணி ஸ்ரீ குமார் சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கழக நிறுவன கொடியேற்றி பின்னர் சங்கரன்கோவிலில் உள்ள அனைத்து தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா தலைமையிலான திமுகவினர் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது