தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின்னர் பழைய குற்றாலம் அருவி தவிர அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் கடந்த இரண்டு வாரங்களாக சீராக மெயின் அருவிகளில் விழும் தண்ணீரில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
நேற்று இரவு குற்றாலம் மெயின் அருவியில் விழும் தண்ணீரில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.