குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிதண்ணீர்

53பார்த்தது
தென்காசி மாவட்டம் பாபநாசத்திலிருந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் தென்காசி செங்கோட்டை பகுதிகளுக்கு நாள்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடையம் அருகே மாதாபுரம் மெயின் சாலை வழியாக செல்லும் இந்த கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நான்கு நாட்களாக தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த தண்ணீர் அருகில் உள்ள செங்கல் சூளையில் குளம்போல் தேங்கி வருகிறது.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரம் உடனே வந்து பார்வையிட்டு குடிநீர் பைப் சரி செய்ய வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி