செங்கோட்டை மர அறுவை ஆலையில் பணம் திருடிய ஊழியா் கைது

69பார்த்தது
செங்கோட்டை மர அறுவை ஆலையில் பணம் திருடிய ஊழியா் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல்நிலைய சரகத்திற்குள்பட்ட பிரானூா் பாா்டரில் மர அறுவை ஆலையில், கடந்த 6ஆம் தேதி இரவில் ரூ. 45 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து ஆலை நிா்வாகம் சாா்பில் அளித்த புகாரின் பேரில் செங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளா் முரளீதரன், தலைமை காவலா் ராஜா சிங் மற்றும் அல்போன்ஸ்ராஜா, கணேஷ்குமாா் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மர அறுவை ஆலையில் பணிபுரிந்து வரும் வல்லம் மாரியப்பன்(45) இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மாரியப்பனைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 45 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடர்புடைய செய்தி