தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட ஆலங்குளம், ஆலங்குளம் அனைத்து மகளிர், சுரண்டை, வி. கே. புதூர், ஊத்துமலை, கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு காவலர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆலங்குளம் பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.