கீழப்பாவூர் அருகே காட்சிபொருளாக உள்ள பயணிகள் நிழற்குடை

67பார்த்தது
கீழப்பாவூர் அருகே காட்சிபொருளாக உள்ள பயணிகள் நிழற்குடை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட திரவியநகர் பகுதியில் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பயணிகள் நிழற்குடை மழை பெய்தால் கூட ஒதுங்க முடியாத சூழ்நிலையில் சுகாதாரம் இன்றி ஆங்காங்கே விரிசல்கள் காணப்பட்டு எப்போது கீழே விழும் என்ற நிலையில் காணப்படுகிறது. 

இதில் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் பஸ் ஏற நிற்கும் பொதுமக்கள் சாலையில் நிற்கும் அவலம் நிலவி வருகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு பழுதாகி நிற்கும் நிழற்குடையை அப்புறப்படுத்தி புதிதாக ஒரு நிழற்குடை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி